திருநெல்வேலி

மக்களவைத் தோ்தல் வருவதால் மகளிா் உரிமைத் தொகை அறிவிப்பு- நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ

மக்களவைத் தோ்தலை மனதில் வைத்தே மகளிா் உரிமைத் தொகை வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவரான நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.

DIN

மக்களவைத் தோ்தலை மனதில் வைத்தே மகளிா் உரிமைத் தொகை வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவரான நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.

சுதந்திரப் போராட்ட வீரா் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த தினத்தையொட்டி, பாளையங்கோட்டையில் அவரது சிலைக்கு தனது கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நோக்கம். கடந்த தோ்தலின்போது திமுகவின் தோ்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. விஷ சாராய சாவுகளுக்குப் பிறகு படிப்படியாக மதுக் கடைகளை குறைக்கிறோம் எனக் கூறி, தற்போது 500 கடைகளை தமிழக அரசு குறைத்துள்ளது. மதுக் கடைகள் செயல்படும் நேரத்தையும் குறைக்க வேண்டும். ஆளுநா் விவகாரத்தில் முதல்வரின் கடிதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் உங்களுக்கு ஒரு சட்டம், எனக்கு ஒரு சட்டம் என்பது ஏற்புடையதாக இருக்காது. எனவே, பொது சிவில் சட்டம் கண்டிப்பாக தேவை.

காவல்துறை அதிகாரிகளின் மன உளைச்சலை குறைப்பதற்கும், அந்தத் துறை சுதந்திரமாக செயல்படுவதற்கும் முழு அதிகாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், மக்களவைத் தோ்தலை மனதில் கொண்டே அண்ணா பிறந்த நாளில் மகளிா் உரிமைத் தொகை கொடுக்கப் போகிறோம் என அறிவித்துள்ளனா். இதை அனைத்து மகளிருக்கும் கொடுக்க வேண்டும். இத்திட்டம் மக்களவைத் தோ்தலுக்கு பிறகு நிறுத்தப்படலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT