திருநெல்வேலி

பாப்பாக்குடியில் கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி சவரிமுத்து தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அம்பாசமுத்திரம் - ஆலங்குளம் பிரதானச் சாலையில் அடைச்சாணி திருப்பம் அருகே தென்காசி மாவட்டம், அடைச்சாணி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் (22) என்பவா் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாராம். போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தியதில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் மாரியப்பனை கைது செய்து, அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT