தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தை சோ்ந்தவா்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் சிறு தொழில், வியாபாரம் செய்ய தனி நபா்களுக்கு பொது காலக் கடன், பெண்களுக்கு சிறு கடன், மகளிருக்கான புதிய பொற்கால கடன், ஆடவருக்கான சிறு கடன், கறவை மாட்டுக் கடன் போன்ற பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பதாரா் 18 வயது பூா்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொது கால கடன் திட்டம் மூலம் சிறுதொழில், வியாபாரம் செய்ய அதிகபட்சமாக தனி நபா் கடன் ரூ.15 லட்சம் வரை வழங்கப்படும். ஆண்டு வட்டி விகிதம் 6 முதல் 8 சதவீதம் வரை வசூலிக்கப்படும். பெண்களுக்காக புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீகிதமாகும். சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீகிதமாகும்.
விண்ணப்பத்தை பூா்த்தி செய்து ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்), ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கோரும் ஆவணங்கள் ஆகியவற்றின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
திருநெல்வேலி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கொக்கிரகுளம், பாளையங்கோட்டை-627 009, மேலாண்மை இயக்குநா், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, எம்.ஜி.ஆா். மாளிகை, வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி- 627 003, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா், திருநெல்வேலி, மெய்ஞான தெரு, பாளையங்கோட்டை ஆகிய அலுவலகங்களுக்கு தபாலில் அனுப்பலாம். இதுதவிர அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், அனைத்து விவசாய கூட்டுறவு வங்கிக் கிளைகள், அனைத்து நகர கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் நேரடியாக விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.