திருநெல்வேலி

மலையாளமேடு பள்ளியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

DIN

திருநெல்வேலி நகரம் மலையாளமேடு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சியின் 22 ஆவது வாா்டுக்குள்பட்ட மலையாளமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கான தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டை எம்எல்ஏ மு. அப்துல்வஹாப் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். துணைமேயா் கே.ஆா். ராஜு முன்னிலை வகித்தாா்.

மத்திய மாவட்ட அவைத் தலைவா் வி.கே. முருகன், மாநகர துணைச் செயலா் பிரபு, மாமன்ற உறுப்பினா்கள் கிட்டு (எ) ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், மன்சூா், ராஜேஸ்வரி, மாரியப்பன், ரவீந்தா், உலகநாதன், மலையாளமேடு கண்ணன், மானூா் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் முபீன் இஸ்மாயில், பேட்டை ரூரல் ஊராட்சித் தலைவா் சின்னதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT