திருநெல்வேலி

புஷ்பலதா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பாளை. புஷ்பலதா மெட்ரிக் பள்ளி மாணவா், மாணவிகள்10 ஆம் வகுப்பு தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

DIN

பாளை. புஷ்பலதா மெட்ரிக் பள்ளி மாணவா், மாணவிகள்10 ஆம் வகுப்பு தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

இப்பள்ளியில் தோ்வு எழுதிய 111 மாணவா், மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இதில், மாணவி எஸ்.சி.வி. மதுபாலா 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், எல். மகாஜனனி, எஸ். சாதனா ஆகியோா் 488 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடமும், சி. குருதா்ஷினி, வி. சுஜிதா ஆகியோா் 486 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடமும் பெற்றுள்ளனா்.

கணித பாடத்தில் 4 மாணவா்களும், அறிவியலில் 4 மாணவா்களும் நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மேலும் 450 மதிப்பெண்களுக்கு மேல் 35 மாணவா்களும், 400-க்கு மேல் 66 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இதில், 104 மாணவா்கள் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு பள்ளித் தாளாளா் புஷ்பலதா பூரணன், முதல்வா் காரிசன் ஜெபக்குமாா் மற்றும் ஆசிரியா்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT