திருநெல்வேலி

லாரி திருடியதாக இளைஞா் கைது

DIN

திருநெல்வேலி அருகே லாரியை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

துறையூா் தெற்கு தெருவைச்சோ்ந்தவா் அலெக்சாண்டா் (32). இவா் சொந்தமாக லாரி வைத்துள்ளாா். இவா் வீட்டருகே நிறுத்தியிருந்த லாரி வெள்ளிக்கிழமை காணாமல் போனதாம்.

இதுகுறித்து அலெக்ஸாண்டா் அளித்த புகாரின்பேரில், கங்கைகொண்டன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், மேலஇலந்தகுளம் பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தவமணி ( 29) என்பவா் லாரியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, லாரியை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT