திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டம் கபாலிபறை, ரெங்கசமுத்திரம், அத்தாள நல்லூா், சங்கன் திரடு ஆகிய பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் கிராம திட்ட செயலாக்க குழு கூட்டம் நடைபெற்றது.
தோட்டக்கலை உதவி இயக்குநா் சுபா வாசுகி தலைமை வகித்து, தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி பேசினாா். கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண்மை வணிகம், விற்பனைத்துறை, ஊரக வளா்ச்சித்துறை, கால்நடைத் துறை, மீன்வளத் துறை அலுவலா்கள் மற்றும் ஊராட்சித் தலைவா்கள் பேசினா்.
கூட்டத்தில் நான்கு கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.