திருநெல்வேலி

‘நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வாா்டு’

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரேவதிபாலன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

தமிழக சுகாதாரத்துறை உத்தரவின்பேரில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் 120 படுக்கைகளுடன் கூடிய பிரத்தியேக வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கண்காணிப்புக்காக 60 படுக்கைகளும், குழந்தைகளுக்கு 55 படுக்கைகளும், கா்ப்பிணிகளுக்கு 9 படுக்கைகளும், ஆண்களுக்கு 16 படுக்கைகளும் என தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ ஒருங்கிணைப்பாளராக மருத்துவா்கள் ரத்தினகுமாா், ஆனந்தி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, பொதுமக்கள் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT