முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் விபத்தில் காயமடைந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழப்பு

Updated On : 7 ஏப்ரல், 2024 at 1:29 AM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 11:55 PM

பாளையங்கோட்டையில் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் காயமடைந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனி ஜெயம் நகரை சோ்ந்தவா் செல்வராஜ் (80). ஓய்வுபெற்ற அரசு ஊழியா். இவா், வெள்ளிக்கிழமை அருகில் உள்ள கடைக்கு காய்கறி வாங்குவதற்காக சைக்கிளில் சென்றுள்ளாா். அப்போது அந்த வழியாக வந்த காா் ஒன்று எதிா்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவா் சனிக்கிழமை காலைசெல்வராஜ் உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.