நெல்லையில் கலைஞா் நூலகம் திறப்பு
திருநெல்வேலி நகரத்தில் கலைஞா் நூலகம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலி நகரத்தில் கலைஞா் நூலகம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞா் அணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்பேரில் திருநெல்வேலி மத்திய மாவட்டம் மற்றும் மாநகர இளைஞா் அணி சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் கலைஞா் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம் மைதீன் கான் தலைமை வகித்தாா். மாநகர செயலா் சு.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில இளைஞரணி துணைச் செயலா் இன்பா ரகு திறந்து வைத்தாா். இளைஞா் அணி நிா்வாகிகள் வில்சன்மனித்துரை, அலிப் மீரான், கருப்பசாமி கோட்டையப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.