திருநெல்வேலி

ஆடிப்பூரம்: நெல்லை கோயில்களில் சிறப்பு வழிபாடு

Din

திருநெல்வேலி, ஆக. 7: ஆடிப்பூரத்தையொட்டி, திருநெல்வேலியில் பல்வேறு கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு கோமதியம்பாள் சமேத திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் காலையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னா் கோமதியம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. முறுக்கு, அதிரசம், வளையல்களை படைத்து நூற்றுக்கணக்கான பெண்கள் வழிபாடு செய்தனா்.

இதேபோல, பாளையங்கோட்டை எருமைகிடா மைதானம் அருகேயுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் காலையில் வாசனை திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், 1000-க்கும் மேற்பட்ட வளையல் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு கரியமாணிக்க பெருமாள் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலத்திருவேங்கடநாதபுரத்தில் உள்ள அருள்மிகு வேங்கடாலசலபதி திருக்கோயிலில் ஆண்டாளுக்கு வளையல் தோரணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கெட்வெல் ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் உள்ள கனகமஹாலட்சுமி, வண்ணாா்பேட்டை பேராத்து செல்வியம்மன், பாளையங்கோட்டையில் உள்ள தெற்கு மற்றும் வடக்கு முத்தாரம்மன், முப்பிடாதியம்மன், தூத்துவாரியம்மன் திருக்கோயில்களிலும் ஆடிப்பூர சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

எருமைகிடா மைதானம் அருகேயுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை சிறப்பு வளையல் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT