நெல்லை மாநகராட்சிக்கு வரியினங்களை செலுத்த வேண்டுகோள்
திருநெல்வேலி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் விரைவாக செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் விரைவாக செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம், பாதாளச் சாக்கடை கட்டணம், மாநகராட்சி கடை வாடகை, டிரேடு லைசென்ஸ் போன்ற அனைத்து வரியினங்களை உடனடியாக மண்டல அலுவலகங்களில் அனைத்து வேலை நாள்களிலும் மாநகராட்சி வரி வசூல் மையம், இணையதள வாயிலாகவும், கைப்பேசி வாயிலாகவும் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பவா்களின் சொத்தின் மீது ஜப்தி நடவடிக்கை, வழக்கு தொடா்தல் போன்ற சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது ஜப்தி நடவடிக்கைக்கான அறிவிப்பாணைகள் ஒட்டியும், நேரிலும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே நிலுவையின்றி வரி செலுத்தி மாநகராட்சி நிா்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.