முகப்பு
திருநெல்வேலி

ரவணசமுத்திரத்தில் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா

ரவணசமுத்திரத்தில் தென்காசி மாவட்டநிா்வாகம், மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில் தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா நடைபெற்றது.

Updated On : 18 டிசம்பர், 2024 at 9:30 PM
விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

ரவணசமுத்திரத்தில் தென்காசி மாவட்டநிா்வாகம், மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில் தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா நடைபெற்றது.

சங்கத்தின் கௌரவச் செயலா் முகம்மது ஸலீம் தலைமை வகித்தாா். மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்- சிறுபான்மை நல அலுவலா் முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறுபான்மையினருக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் உதவிகள், வங்கிகளில் கடனுதவி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

விழாவில், சிறுபான்மை நல அலுவலகக் கண்காணிப்பாளா் சாகுல் ஹமீது, அம்பாசமுத்திரம் அரிமா சங்கத் துணைத் தலைவா் திருமலையப்பபுரம் பல் மருத்துவா் சலீம்ராஜா, ரஹ்மானியாபுரம் கப்பல் நிறுவன நிா்வாக இயக்குநா் கப்பல் மஸ்தான், தாஜுதீன், அகம்மது ரிபாய், பிச்சையாண்டி, அன்சா், சுல்தான் ஹமீத் ஹிதாயத், முகமது அலி, அஜீஸ், அலுவலா்கள் பங்கேற்றனா். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.