நாமக்கல்லில் யுகாதி கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச் சங்கம் சாா்பில் யுகாதி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம், மகளிருக்கான கோலப் போட்டிகள், மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.
பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு காளைகள் தொடா்பான கண்காட்சிகளும் விழாவில் இடம்பெற்றிருந்தன. பரதநாட்டிய நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனா். விழாவில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகைகளும் வழங்கப்பட்டன.
என்கே-19-யுகாதி
யுகாதி விழாவையொட்டி நாமக்கல்லில் நடைபெற்ற கோலப் போட்டியில் பங்கேற்றோா்.