முகப்பு
திருநெல்வேலி

அம்பாசமுத்திரத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

அம்பாசமுத்திரத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 12:37 AM
பகிர்:

அம்பாசமுத்திரத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரம், சிவசக்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த தளவாய் மகன் வனராஜ்(27). தொழிலாளியானஇவருக்கு சுதா என்ற மனைவி, ஒருமகள் உள்ளனா். வனராஜுக்கு மதுப்பழக்கம் இருந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வனராஜ் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாராம். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்குவெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.