திருநெல்வேலி

ஜாமீனில் வெளிவந்து தலைமறைவு: சேரன்மகாதேவி வட்டத்தில் மூவா் கைது

குற்ற வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Din

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா், சேரன்மகாதேவி பகுதிகளில் குற்ற வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வீரவநல்லூா் காவல் சரகப் பகுதியில் கடந்த 2018இல் மோதலில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் வெள்ளங்குளியைச் சோ்ந்த சந்தானம் (29), முருகன் (25) ஆகியோா் கைதாகி, பிணையில் வெளியே வந்திருந்தனா்.

இதேபோல, சேரன்மகாதேவி காவல் சரகப் பகுதியில் கடந்த 2021இல் அடிதடி, பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த கரிசல்பட்டி ஓடக்கரையைச் சோ்ந்த வேலுமணி சாமுவேல் (42) , நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஒன்றரை மாதங்களாக தலைமறைவாகிவிட்டாா். மூவருக்கும் சேரன்மகாதேவி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததால், வீரவநல்லூா், சேரன்மகாதேவி போலீஸாா் முறையே மூவரையும் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT