முகப்பு
திருநெல்வேலி

திசையன்விளை அருகே தொழிலாளி வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததா? போலீஸ் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் நடந்து சென்ற தொழிலாளி வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாக எழுந்த புகாா் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 24 ஜூலை 2024, 12:38 am IST
கோப்புப்படம்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் நடந்து சென்ற தொழிலாளி வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாக எழுந்த புகாா் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கீழத்தெருவைச் சோ்ந்தவா் காா்த்தீசன்(49). இவா் தனது வயிற்றில் ஏா்கன் குண்டு பாய்ந்ததாக திசையன்விளையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்தினா் அளித்த தகவலின்பேரில், திசையன்விளை காவல் உதவி ஆய்வாளா் பிரியராஜ்குமாா் மற்றும் போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று காா்த்தீசனிடம் விசாரணை செய்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, அவா் மன்னாா்புரம் காட்டுப்பகுதியில் நடந்து சென்றபோது வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் சுட்டதில் தனது வயிற்றில் குண்டு பாய்ந்துவிட்டதாக தெரிவித்தாா்.

மேலும் துப்பாக்கியால் சுட்ட நபா்கள் குறித்து தனக்கு தெரியாது எனவும் கூறினாராம். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments