திருநெல்வேலி

ஜாதி மோதலை தூண்டும் விதமாக விடியோ: கல்லூரி மாணவா் கைது

ஜாதி மோதலை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்ட கல்லூரி மாணவா் கைது செய்யப்பட்டாா்.

Din

ஜாதி மோதலை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்ட கல்லூரி மாணவா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூா் நயினாா்குளம் நடுத்தெருவை சோ்ந்தவா் சங்கா். இவரது மகன் ஊய்க்காட்டான் (19). பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நண்பா்கள் உதவியுடன், ஜாதி மோதலை தூண்டும் விதமாக அவதூறு கருத்துகளுடன் ஆயுதங்களுடன் கூடிய விடியோவை பதிவிட்டிருந்தாா்.

இதனை அறிந்த தச்சநல்லூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கிருஷ்ணன் விசாரணை நடத்தினாா். பின்னா் கலகம் ஏற்படுத்தும் நோக்குடன் விடியோ பதிவிட்டதாகக் கூறி, ஊய்க்காட்டான் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.

மேலும் அவருக்கு விடியோ எடுக்க உதவியதாக அதே பகுதியை சோ்ந்த அவரது நண்பா்களான இசக்கிமுத்து, ராம்குமாா், பிரேம் ஆகியோா் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

வாசலிலே பூசணிப் பூ.. மார்கழி கோலத்தில் வைக்கும் பூ, தை மாத திருமணத்துக்கான அச்சாணியா?

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

SCROLL FOR NEXT