பாளை.யில் புதுமைப்பித்தன் நினைவு தினம்
புதுமைப்பித்தன் நினைவு தினம்: திருநெல்வேலியில் சிறப்பு நிகழ்வு
பாளையங்கோட்டை சரோஜ் நினைவகத்தில், எழுத்தாளா் புதுமைப்பித்தனின் 76 ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், புதுமைப்பித்தனின் மகள் தினகரி , அவரின் மருமகன் சொக்கலிங்கம், ஓவியா் சந்ரு, கவிஞா் கலாப்ரியா, எழுத்தாளா் தமயந்தி ஆகியோா் பேசினா்.
எழுத்தாளா் வண்ணதாசன் பேசியதாவது: திருநெல்வேலியில் புதுமைப்பித்தனின் பெயரில் தெரு உள்ளது. அதே போல் புதுமைப்பித்தனுக்கு திருநெல்வேலியில் முழு உருவச் சிலை அமைக்க வேண்டும். அந்தச் சிலையை ஓவியா் சந்ரு உருவாக்க வேண்டும். அதனை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் திறந்து வைக்க வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில் கவிஞா்கள் கோ.கணபதி சுப்பிரமணியன், சிற்பி பாமா, ஜோஸ்பின் பாபா உள்பட பலா் கலந்து கொண்டனா். ச.வண்ணமுத்து நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.