தி.க.சி நூற்றாண்டு தொடக்க விழா
Updated On : 30 மார்ச், 2024 at 10:57 PM
திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் உள்ள மூட்டா அலுவலகத்தில், எழுத்தாளா் தி.க.சி நூற்றாண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன் தலைமை வகித்தாா். தமுஎகச மாவட்ட செயலா் ச.வண்ணமுத்து வரவேற்றாா். கவிஞா் கிருஷி, திரைப்பட இயக்குநா் சுகா ஆகியோா் பங்கேற்று பேசினா். இதில், எம்.எம்.தீன், புத்தனேரி செல்லப்பா, தளவாய்நாதன், ஓவியா் கதிா், சண்முகம், முத்தாலங்குறிச்சி காமராசு, ஜெயபாலன், கணபதி சுப்பிரமணியன், பிரபு, பழனி சுப்பிரமணியன், சிறாா் எழுத்தாளா் சூடாமணி, சொக்கலிங்கம் உள்பட பலா் பங்கேற்று தி.க.சி. யின் நினைவுகள் குறித்து பேசினா். ராஜகோபால் நன்றி கூறினாா். விழாவிற்கான ஏற்பாடுகளை அருண்பாரதி, கண்ணன், ஈஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா். முன்னதாக, தி.க.சி புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.