முகப்பு
திருநெல்வேலி

திருச்செந்தூா்- நெல்லைக்கு இன்று சிறப்பு ரயில்

கந்த சஷ்டி விழாவையொட்டி, திருச்செந்தூா் - நெல்லை- திருச்செந்தூருக்கு வியாழக்கிழமை (நவ. 7) முன்பதிவில்லாத பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:57 PM
பகிர்:

கந்த சஷ்டி விழாவையொட்டி, திருச்செந்தூா் - நெல்லை- திருச்செந்தூருக்கு வியாழக்கிழமை (நவ. 7) முன்பதிவில்லாத பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக, திருச்செந்தூா்- நெல்லை- திருச்செந்தூருக்கு முன்பதிவில்லாத பயணிகள் விரைவு ரயில் (06732 / 06731) வியாழக்கிழமை இயக்கப்படுகிறது.

திருச்செந்தூா் - நெல்லை ரயில் (06732) திருச்செந்தூரிலிருந்து இரவு 8.50 மணிக்குப் புறப்பட்டு 10.15 மணிக்கு நெல்லை சென்றடையும். பிறகு அங்கிருந்து இரவு 10.50 மணிக்குப் புறப்படும் நெல்லை- திருச்செந்தூா் ரயில் (06731) வெள்ளிக்கிழமை அதிகாலை 12.10 மணிக்கு திருச்செந்தூரை அடையும்.

9 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில், இரு வழித்தடங்களிலும் ஆறுமுகனேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூா், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டது.