என்ஜிஒ காலனி ஜெபா காா்டனில்சிறப்பு வரி வசூல் முகாம்
திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில், என்ஜிஓ காலனி ஜெபா காா்டனில் சிறப்பு வரி வசூல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில், என்ஜிஓ காலனி ஜெபா காா்டனில் சிறப்பு வரி வசூல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், திருநெல்வேலி மாநகராட்சியின் 54 ஆவது வாா்டுக்குள்பட்ட ஜெபா காா்டன் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றிற்கான வரியினங்கள், குடிநீா் இணைப்புக் கட்டணம் பெறுவதற்கான சிறப்பு வரி வசூல் முகாம் மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா உத்தரவின்பேரில் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு மேலப்பாளையம் உதவி ஆணையா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். மாமன்ற உறுப்பினா் கருப்பசாமி கோட்டையப்பன் தொடங்கி வைத்தாா். 50-க்கும் மேற்பட்டோா் வரியினங்களைச் செலுத்தி ரசீது பெற்றனா். மாநகராட்சி அதிகாரிகள் வடிவேல்முருகன், ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.