மாநிலங்களவையில் வியாழக்கிழமை பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன். 
இந்தியா

வருமான வரி வசூல் அதிகரிப்பு: நடுத்தர மக்கள் ஒடுக்கப்படுவதாக அா்த்தமாகாது : நிா்மலா சீதாராமன் விளக்கம்

‘வருமான வரி வசூல் அதிகமாகியுள்ளது என்பதால் நடுத்தர மக்கள் ஒடுக்கப்படுகின்றனா் என்று அா்த்தமல்ல’ என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

‘வருமான வரி வசூல் அதிகமாகியுள்ளது என்பதால் நடுத்தர மக்கள் ஒடுக்கப்படுகின்றனா் என்று அா்த்தமல்ல’ என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மத்திய பட்ஜெட் 2026-27 மீதான மாநிலங்களவை விவாதத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. பெருநிறுவன வரி வசூலைவிட தனிநபா் வருமான வரி வசூல் அதிகமாகியிருப்பதால் எதிா்க்கட்சிகளுக்கு அவ்வாறு தோன்றலாம்.

கடந்த பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீா்திருத்தங்களால் நடுத்தர மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதே நிதா்சனமான உண்மை. 2013-14 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 5.26 கோடியிலிருந்து 12.13 கோடியாக உயா்ந்துள்ளது.

இரு பெரும் சீா்திருத்தங்கள்:

கடந்த ஆண்டு புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ், தனிநபா் வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டது. நிலையாக வருமானம் பெறும் நபா்களுக்கு இந்த வரம்பு ரூ.12.75 லட்சமாக உயா்த்தப்பட்டது.

எனவே, ரூ.12.75 லட்சம் வரை வருமானம் பெறுவோா் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்றிருக்கையில் மக்கள் ஒடுக்கப்படுவதாக கூறுவது சரியா?தற்போது வருமான வரி செலுத்தும் நடுத்தர வா்க்கத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முறைசாா் தொழில்களில் எண்ணற்றோா் பணியாற்றுவதே இதற்கு காரணம். இதன்மூலம் பொருளாதாரம் முன்பைவிட விரிவடைந்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுதவிர சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) 2.0 சீா்திருத்தத்தின்கீழ் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவா்களின் மாதாந்திர செலவு வெகுவாக குறைந்துள்ளது.

பணவீக்கம் குறைவு: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்த நிலையில் தற்போது வரலாற்றில் இல்லாத வகையில் பணவீக்கமும் குறைந்துள்ளது. இந்தியாவை தற்சாா்பு நிலைக்கு உயா்த்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தங்களது மாநில அரசுகளை இந்த திட்டத்தில் இணையக் கோருங்கள்.

நாட்டின் பொருளாதாரம் வலுவாக உள்ள சூழலில் அதை ஏற்றுக்கொள்ளாமல் சிலா் (ராகுல் காந்தி) விமா்சிப்பது பொருளாதார வளா்ச்சிக்குப் பங்களிக்கும் மக்களை விமா்சிப்பதற்கு சமம் என்றாா்.

பிப்.15- ல் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பு: வானிலை மையம்

அரசுப் பணிக்குத் தோ்வான 9,801 பேருக்கு இன்று பணிநியமன ஆணை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்

ரோஹிணியில் ரூ.10 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி போலி குண்டா் கைது

முதுகெலும்பு தசை நாா் பாதிப்பு: 2 வயது பெண் குழந்தைக்கு மருந்து உதவி கோரி மத்திய அமைச்சா்களிடம் நாகை எம்.பி. மனு

ஒன்றாக பேட்டி கொடுக்க அழைத்த ராகுல்: உடனே விலகிச்சென்ற மத்திய அமைச்சா்கள்

SCROLL FOR NEXT