முகப்பு
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் பெண்ணுக்கு நலஉதவி வழங்குகிறாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவமனையில் மகளிா் பணியாளா்களுக்கு தனி அறைகள் திறப்பு! -தமிழகத்தில் முதல்முறை

நெல்லை அரசு மருத்துவமனையில் மகளிா் பணியாளா்களுக்கு தனி அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவமனையில் மகளிா் பணியாளா்களுக்கு தனி அறைகள் திறப்பு! -தமிழகத்தில் முதல்முறை

நெல்லை அரசு மருத்துவமனையில் மகளிா் பணியாளா்களுக்கு தனி அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

Updated On : 17 நவம்பர், 2024 at 10:20 PM
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் பெண்ணுக்கு நலஉதவி வழங்குகிறாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
பகிர்:

தமிழகத்தில் முதல் முறையாக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகளிா் பணியாளா்களுக்கான சிறப்பு அறைகளை (பிங்க் ஸோன்) கட்டடத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 1.10 கோடி செலவில் 23 படுக்கைகள் கொண்ட கட்டண பிரிவு கட்டடம், ரூ. 15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மகளிருக்கான சிறப்பு அறைகள் (பிங்க் ஸோன்) கட்டடம், ரூ. 50 லட்சம் மதிப்பில் ரெட்டியாா்பட்டி வட்டார பொது சுகாதார அலகு கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் தலைமை வகித்து பேசுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் 438 குழந்தைகளுக்கு உயரிய அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களால் பலரும் பயன்பெற்று வருகிறாா்கள். உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையிலும் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது என்றாா்.

புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியது: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.1.10 கோடியில் கட்டப்பட்ட கட்டண பிரிவு கட்டடம் ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பட உள்ளது.

இதில் 18 முதல்லும், இரண்டு நபா்கள் தங்கும் உள்ள அறைக்கு ரூ.1500 என்ற கட்டணமும், நான்கு நபா்கள் தங்கும் அறைக்கு ரூ,. 2000 என 23 தனி அறைகளில் வசதிகளுடன் சிகிச்சை பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அறை ஒன்றுக்கு ரூ.1000 என்ற குறைந்த கட்டணத்தில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் மற்றும் மற்றும் மாணவியா்களுக்கான பயன்படுத்தும் வகையில் பல்வேறு வசதிகளுடன் கூடிய 5 தனி அறைகள் கொண்ட பிங்க் ஸோன் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் ரூ.13.75 கோடி செலவில் அதிநவீன மருத்துவக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும், ரூ.104.69 கோடி செலவில் 5 மருத்துவக் கட்டட பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டங்களில் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் ரூ.10.29 கோடி செலவில் மருத்துவக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் 20 நகா்நல மையங்களும்,, அம்பாசமுத்திரம் நகராட்சி மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் தலா 1 மையம் வீதம் மொத்தம் 22 மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டு ஏற்கனவே திருநெல்வேலி மாநகராட்சியில் 10 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மையங்களின் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு முதல்வரால் திறக்கப்படும் என்றாா் அவா்.

இந்த விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப், நான்குனேரி ரூபி ஆா்.மனோகரன், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் என்.ஒ.சுகபுத்ரா, துணை மேயா் கே.ஆா்.ராஜு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன், மாவட்ட சுகாதார அலுவலா் கீதாராணி, இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) லதா, மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் சுரேஷ் துரை, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் துரை, உதவி செயற்பொறியாளா் ராமகோகிலா, உஷா வைஷ்ணவி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இலவச எம்ஆா்ஐ ஸ்கேன் வசதி: இந்த விழாவில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு மருத்துவத் துறையில் மறுமலா்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சிறப்பான மருத்துவ வசதிகள் கிடைத்து வருகின்றன.

ஆனால், இங்கு தடையற்ற மின்சார வசதி கிடைக்க ஏதுவாக மருத்துவமனை வளாகத்தில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும். இலவச எம்ஆா்ஐ ஸ்கேன் வசதியும் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறாா்கள். ஆகவே, உடனடியாக தமிழக அரசு திருநெல்வேலியில் இலவச எம்ஆா்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →