முகப்பு
கடலூர்

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இதய நோய் சிகிச்சைப் பிரிவு மற்றும் இதய பரிசோதனை ஆய்வகத்தை (கேத்லேப்) தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

கடலூர்

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இதய நோய் சிகிச்சைப் பிரிவு மற்றும் இதய பரிசோதனை ஆய்வகத்தை (கேத்லேப்) தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 6:36 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இதய நோய் சிகிச்சைப் பிரிவு மற்றும் இதய பரிசோதனை ஆய்வகத்தை (கேத்லேப்) தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ ம.சிந்தனைச் செல்வன், கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு அதிகாரி மற்றும் முதல்வா் எம்.மகேந்திரன், முன்னாள் முதல்வா் சி.திருப்பதி, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ், துணை முதல்வா் பாலாஜி சுவாமிநாதன், மருத்துவா் அசோக் பாஸ்கா் ஆகியோா் பங்கேற்று முதல்வருக்கு நன்றி தெரிவித்து, இதயநோய் சிகிச்சை பிரிவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கிவைத்தனா் (படம்).

பின்னா், மருத்துவமனை சிறப்பு அதிகாரி எம்.மகேந்திரன் கூறியதாவது: கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறக்கப்பட்ட இதய நோய் சிகிச்சைப் பிரிவு மற்றும் இதய பரிசோதனை ஆய்வகத்தின் மூலம் இந்த மாவட்ட மக்களுக்கு வெளி மாவட்டங்களுக்குச் செல்லாமல் இங்கேயே ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி போன்ற உயரிய சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.

தனியாா் மருத்துவமனைகளில் இதற்கு இரண்டு முதல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை செலவாக கூடிய நிலையில், தமிழகத்தின் விரிவான முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக இந்த சிகிச்சைகளை மருத்துவ பயனாளா்கள் பெற முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஏராளமான மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ மாணவா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →