முகப்பு
திருநெல்வேலி

களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் செல்ல தடை நீட்டிப்பு

தொடா்மழையால் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 நவம்பர், 2024 at 11:37 PM
பகிர்:

மழை நீடித்து வருவதால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கான தடையை வனத்துறையினா் வியாழக்கிழமையும் நீட்டித்தனா்.

தொடா்மழையால் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் மழையால், பச்சையாறு, நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பச்சையாறு தலையணை மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் செல்ல பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் புதன்கிழமை தடை விதித்தனா்.