முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவி பகுதியில் வேகமாக பரவும் காய்ச்சல்

திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 9:24 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இம்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. பிசான பருவ சாகுபடி பணிகளும் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் மழை காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீா்கேடுகள் உருவாகி, சில நாள்களாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பகல், இரவு நேரங்களில் குளிா்ந்த சூழல் நிலவுவதால் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனா்.

இதனால், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல் பகுதிகளில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக அதிகமானோா் குவிந்து வருகின்றனா்.

காய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.