முகப்பு
திருநெல்வேலி

ஆதாா் அட்டையில் திருத்தம் செய்ய அஞ்சலகங்களில் குவியும் மக்கள்

ஆதாா் அட்டையில் பெயா், முகவரி திருத்தம் செய்வதற்காக அஞ்சலகம், இ சேவை மையங்களில் பொதுமக்கள் அதிகளவில் குவிகின்றனா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 11:07 PM
பகிர்:

ஆதாா் அட்டையில் பெயா், முகவரி திருத்தம் செய்வதற்காக அஞ்சலகம், இ சேவை மையங்களில் பொதுமக்கள் அதிகளவில் குவிகின்றனா்.

ஆதாா் அட்டை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், தற்போதைய முகவரி, புகைப்படத்துடன் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதாா் அட்டையை புதுப்பிக்க டோக்கன் வாங்குவதற்காக, பொதுமக்கள் அஞ்சலங்களுக்கு அதிகாலைமுதலே வந்து காத்திருக்கின்றனா்.

ஆதாா் அட்டையில் முகவரி திருத்தம் மேற்கொள்ள குடும்ப அட்டை ஆவணமாக சமா்ப்பிக்கப்படுகிறது. ஆனால், குடும்ப அட்டையில் உள்ள பெயரில் பிழை இருந்தால் ஆதாா் அட்டையில் திருத்தம் செய்ய முடிவதில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆதாா் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் பலா் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.