பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம் சனிக்கிழமை (பிப். 14) அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதந்தோறும் 2-ஆவது சனிக்கிழமைகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் குடும்ப அட்டையில் சிறப்பு திருத்த முகாம் மேற்கொள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில், திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலங்களிலும் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் சனிக்கிழமை (பிப். 14) நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள், புகைப்படம் பதிவு செய்தல் தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். மேலும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரா்கள், அந்தக் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல்ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால், இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவா்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வரும் 25-க்குள் தங்களது விரல்ரேகையை பதிவு செய்து பயன்பெறலாம்.