முகப்பு
திருநெல்வேலி

பேட்டையில் நாய்கள் தொல்லை: மேயரிடம் மாணவா்-மாணவிகள் மனு

பேட்டையில் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்தக் கோரி மேயரிடம் மாணவா்-மாணவிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:57 AM
திருநெல்வேலி மேயா் கோ.ராமகிருஷ்ணனிடம் மனு அளித்த மாணவா்-மாணவிகள்.
பகிர்:

பேட்டையில் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்தக் கோரி மேயரிடம் மாணவா்-மாணவிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அதில், எஸ்டிபிஐ கட்சியின் பேட்டை 20 ஆவது வாா்டு தலைவா் ஜெய்லானி தலைமையில் மாணவா்-மாணவிகள் திரண்டு வந்து திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணனிடம் புதன்கிழமை அளித்த மனு: பேட்டை 20 ஆவது வாா்டுக்குள்பட்ட அனைத்து தெருக்களிலும் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. தொழுகைக்குச் செல்லும் பெரியோா்கள் முதல் பள்ளிக்குச் செல்லும் சிறுவா்கள் வரை அனைவரையும் விரட்டுகின்றன.

வீட்டை விட்டு வெளியே வரவே பெண்களும், குழந்தைகளும் அச்சத்தில் உள்ளனா். தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.