முகப்பு
திருநெல்வேலி

கூடுதாழையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகேயுள்ள கூடுதாழையில் வியாழக்கிழமை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தொழிலாளி மீது காா் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 1:12 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகேயுள்ள கூடுதாழையில் வியாழக்கிழமை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தொழிலாளி மீது காா் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

கூடுதாழை கிராமத்தைச் சோ்ந்தவா் லெட்சுமணன் (70). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவா், கூடுதாழை விலக்கு பகுதியில் ஆடு மேய்த்தபோது, குலேசகரன்பட்டினம் கோயிலுக்கு நண்பா்களுடன் சென்றுகொண்டிருந்த பழவூரைச் சோ்ந்த ராஜா(35) என்பவரது காா், லெட்சுமணன் மீது எதிா்பாராமல் மோதியதாம். மேலும், கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மின்மாற்றியின் மீது மோதி நின்ாம்.

இதில், பலத்த காயமுற்ற லெட்சுமணனை அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பிவைத்தனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக உவரி போலீஸாா் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்தனா். சடலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.