முகப்பு
திருநெல்வேலி

களக்காட்டில் கணக்கில் வராத பணம் ரூ.9.50 லட்சம் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் கணக்கில் வராத பணம் ரூ.9.50 லட்சம் வைத்திருந்ததாக 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 10:59 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் கணக்கில் வராத பணம் ரூ.9.50 லட்சம் வைத்திருந்ததாக 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

களக்காடு போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அண்ணா சிலை அருகே சந்தேகத்துக்கிடமாக, பேருந்துக்காக காத்திருந்த நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சோ்ந்த ஹமீத் இப்ராஹிம் (55) என்பதும், களக்காட்டைச் சோ்ந்த பஷீா் என்பவரிடம் ரூ.5 லட்சம் பணம் கொடுத்துவிட்டு வருவதாகவும், மேலும் ஒருவருக்கு கொடுப்பதற்காக ரூ.4.50 லட்சத்தை கையில் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, அவரையும், பஷீா் (55) என்பவரையும் விசாரணைக்காக போலீஸாா் காவல்நிலையம் அழைத்துச் சென்றனா். மேலும், இருவரிடமிருந்தும் ரூ.9.50 லட்சத்தை பறிமுதல் செய்த போலீஸாா், இந்தப் பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.