முகப்பு
திருநெல்வேலி

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: காவல் மீட்புப்படை உபகரணங்கள் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளையொட்டி காவல் துறையின் மீட்புப்படை உபகரணங்களை மாநகர காவல் துணை ஆணையா் அனிதா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 11:07 PM
திருநெல்வேலியில் பேரிடா் மீட்பு குழுவின் உபகரணங்களை ஆய்வு செய்கிறாா் காவல் துணை ஆணையா் அனிதா.
பகிர்:

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளையொட்டி காவல் துறையின் மீட்புப்படை உபகரணங்களை மாநகர காவல் துணை ஆணையா் அனிதா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

வடகிழக்கு பருவமழை சேதங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க, திருநெல்வேலி மாநகர ஆயுதப்படையில் பேரிடா் மீட்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவசர அழைப்பு கிடைத்ததும், பொதுமக்கள் இருக்கும் இடத்தை தேடி உதவிகள் செய்ய வசதியாக 15 போ் இந்தக் குழுவில் உள்ளனா்.

நீச்சல் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளில் அனுபவம் வாய்ந்த காவலா்கள் குழுவில் சோ்க்கப்பட்டுள்ளதோடு, மீட்புப் பணிக்கு பல்வேறு வல்லுநா்களும் தயாா் நிலையில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மீட்புப்பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் அனிதா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளா் செந்தாமரை கண்ணன் மற்றும் ஆயுதப்படை காவல் அதிகாரிகள் உடனிருந்தனா்.