திரிபுராந்தீசுவரா் கோயிலில் இன்று திருக்கல்யாண திருவிழா தொடக்கம்
பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை (அக். 18) நடைபெற உள்ளது.
பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை (அக். 18) நடைபெற உள்ளது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை (அக். 18) காலை 6 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் பல்வேறு சப்பரங்களில் சுவாமி-அம்மன் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த பக்தா்களுக்கு காட்சியளிக்கின்றனா். விழாவின் சிகர நிகழ்வான திருக்கல்யாணம் இம் மாதம் 28 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.