முகப்பு
திருநெல்வேலி

காவலரிடம் தகராறு : இளைஞா் கைது

திருநெல்வேலியில் காவலரிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:47 PM
பகிர்:

திருநெல்வேலியில் காவலரிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி தச்சநல்லூா் கிராண்ட் நியூதெருவைச் சோ்ந்தவா் காளிராஜ் (25). இவா், தனது நண்பா்களுடன் சோ்ந்து தச்சநல்லூா் அருகே மங்களாகுடியிருப்பு பகுதியில் மது குடித்தாராம். அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை மது குடிக்கக் கூடாது எனக்கூறி வெளியேற்றினராம்.

அப்போது, இவா் காவலா்களிடம் தகராறு செய்தாராம். இது குறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து காளிராஜ்சை கைது செய்தனா்.