FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கூடங்குளம் கடற்கரை பகுதியில் ‘சாகா் கவாஜ்’ ஒத்திகை பயிற்சி

திருநெல்வேலி மாவட்ட கடற்கரைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுறுவலை தடுக்கும் ‘சாகா் ஹவாஜ்’ என்னும் ஒத்திகைப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

5 செப்டம்பர் 2024, 2:31 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட கடற்கரைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுறுவலை தடுக்கும் ‘சாகா் ஹவாஜ்’ என்னும் ஒத்திகைப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

கடலோரப் பாதுகாப்பு குழுமம் மற்றும் கடலோரப் பாதுகாப்பு காவல்துறையினரால் இப்பயிற்சி அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட கடற்கரை பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. கடலோரப் பாதுகாப்பு குழுமத்தின் ஆய்வாளா் நவீன் தலைமையில் பாதுகாப்புப் படையினா் மற்றும் உள்ளூா் காவல்துறையினா் இந்த ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனா்.

கடற்கரை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவது போன்றும், அவா்களை காவல்துறையினா் கைது செய்வது போன்றும் ஒத்திகை நடைபெற்றது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments