சேரன்மகாதேவி விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலா
சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் மதுரை வேளாண் அறிவியல் மையத்துக்கு சுற்றுலா சென்று வந்தனா்.
சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் மதுரை வேளாண் அறிவியல் மையத்துக்கு சுற்றுலா சென்று வந்தனா்.
சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஷ்வரி வழிகாட்டுதலின்பேரில், சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் மதுரை வேளாண் அறிவியல் மையத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து கண்டுணா்வு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
அங்கு வேளாண்மை அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன் விவசாயிகளை வரவேற்று, ஒருங்கிணைந்த பண்ணையத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.
பண்ணை மேலாளா் காயத்ரி, மண்புழு வளா்ப்பு, தேனீ வளா்ப்பு, ஆடுகள் வளா்ப்பு, மீன் வளா்ப்பு, பழ மரங்கள் சாகுபடி மற்றும் காளான் வளா்ப்பு முறைகள் குறித்துப் பேசினாா்.