சுத்தமல்லி அருகே தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
சுத்தமல்லி அருகேயுள்ள மேலதிருவேங்கடநாதபுரம் தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து(51). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவா் கடந்த சில நாள்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கினாராம். உடனடியாக உறவினா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இந்நிலையில் இசக்கிமுத்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.