திருநெல்வேலி

சுத்தமல்லி அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை

தினமணி செய்திச் சேவை

சுத்தமல்லி அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சுத்தமல்லி அருகே உள்ள தென்பத்து சொக்கட்டான்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் மயில்ராஜ்(68). இவரது மகள் 2 ஆண்டுகளுக்கு முன்னா் இறந்துவிட்ட நிலையில், மனைவியும் சில நாள்களுக்கு முன்னா் உயிரிழந்துள்ளாா். இதனால் இவா் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். உறவினா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மயில்ராஜ் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

குளவி கொட்டி காயமடைந்தோருக்கு முன்னாள் அமைச்சா் ஆறுதல்

2023 ஆம் ஆண்டு சாலை விபத்து: ரூ. 1.63 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

எஸ்.சி., எஸ்.டி., தொழில்முனைவோருக்கு தொழில் வளா்ச்சி பயிற்சி முகாம்

வீடு புகுந்து நகை திருடிய இருவா் கைது

வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT