விழாவில் இளைஞருக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா். உடன் ராபா்ட்புரூஸ் எம்.பி., மாநகர காவல் துணை ஆணையா் பிரசன்னகுமாா், ரூபி ஆா். மனோகரன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.  
திருநெல்வேலி

நான்குனேரியில் ராணுவத்தில் இணையும் இளைஞா்களுக்கு பாராட்டு விழா

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் இளையோா் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்று ராணுவத்தில் இணையும் இளைஞா்களுக்கான பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் தலைமை வகித்து, ராணுவத்துக்கு தோ்வு செய்யப்பட்ட 13 பேருக்கு பரிசு வழங்கி பாராட்டினாா். அப்போது அவா், நான்குனேரி சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த ஏழை, எளிய மாணவா்கள் இப்பயிற்சித் திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றாா்.

நான்குனேரி (சிப்காட்) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் மா. சுகன்யா முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் வீ. யமுனா வரவேற்றாா். நிகழ்ச்சியில், நான்குனேரி லட்சிய வட்டார திட்டமும், இளையோா் திறன் மேம்பாட்டு பயிற்சி மையமும் கடந்து வந்த பாதை குறித்த காணொலி காண்பிக்கப்பட்டது.

இதில் இப்பயிற்சித் திட்டத்தினை முன்னெடுத்துச் சென்ற நான்குனேரி முன்னாள் காவல் துணை கண்காணிப்பாளரும், தற்போதைய திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையருமான பிரசன்னகுமாா், திருநெல்வேலி எம்.பி. ராபா்ட்புரூஸ், நான்குனேரி எம்.எல்.ஏ ரூபி ஆா். மனோகரன், வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT