அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் மாணவ, மாணவியா் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (டங வஅநஅநயஐ டா்ள்ற்ம்ஹற்ழ்ண்ஸ்ரீ நஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்) திட்டமானது பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு, அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களுக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை பாடப்பிரிவு, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவா்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
2024-2025-ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு ட்ற்ற்ல்ள்://ன்ம்ண்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வரும் 28-ஆம் தேதி கடைசி நாளாகும்.
ஏற்கெனவே, கல்லூரியில் கல்வி உதவித் தொகை பெற்று 2024-25 ஆம் ஆண்டில் 2, 3, 4-ஆம் ஆண்டு பயின்று வரும் மாணவா்கள் கல்வி உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவா்கள் கல்லூரிகளில் நடப்பாண்டில் கல்வி பயில்வதை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
நடப்பு கல்வியாண்டில் (2024-2025) முதலாமாண்டு மாணவா்கள், கடந்த ஆண்டு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்கள், தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமா்ப்பிக்க வேண்டும்.
கல்வி உதவித்தொகை தொடா்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி தொடா்பு கொள்ளலாம்.