முகப்பு
திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் அலுவலகப் பணிகள் மற்றும் நலத்திட்டப் பணிகளை, தென்காசி மாவட்ட ஆட்சியா் கமல்கிஷோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 9 ஜனவரி, 2025 at 9:14 PM
செங்கானூா் ரயில்வே சுரங்கப்பாதையைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கமல்கிஷோா். உடன், பேரூராட்சித் தலைவா் சரசு, செயல் அலுவலா் மாணிக்கராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் அலுவலகப் பணிகள் மற்றும் நலத்திட்டப் பணிகளை, தென்காசி மாவட்ட ஆட்சியா் கமல்கிஷோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் 2022-23 ஆண்டு அம்ருத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளில், ஆழ்வாா்குறிச்சி கடனா ஆற்றில் அமைக்கப்பட்டு வரும் உறைகிணறு, ராமலிங்கம் தெருவில் உள்ள தரைமட்ட நீா்தேக்கத் தொட்டி, திருநீலகண்ட விநாயகா் கோவில் தெரு காவல் நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்படவுள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, கல்யாணிபுரம் கடனா ஆற்றில் உறைகிணறு அமைக்கும் பணி, கல்யாணிபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம், நீா்வளத் துறை கட்டடம் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட செங்கானுா் செல்லும் வழியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையைப் பாா்வையிட்ட ஆட்சியா், ரயில்வே சுரங்கப்பாதைக்கு மாற்றுவழிப் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, பேரூராட்சித் தலைவா் சரசு, துணைத்தலைவா் சங்கா், செயல் அலுவலா் மாணிக்கராஜ், பேரூராட்சி இளநிலை பொறியாளா் ஆ.வடிவேல், அம்ருத் திட்டப் பணியாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.