முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே துக்க நிகழ்வுக்கு உறவினருடன் சென்றபோது பைக் கவிழ்ந்ததில் படுகாயமடைந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

Updated On : 9 ஜனவரி, 2025 at 9:19 PM
பகிர்:

பாளையங்கோட்டை அருகே துக்க நிகழ்வுக்கு உறவினருடன் சென்றபோது பைக் கவிழ்ந்ததில் படுகாயமடைந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள நெல்லையப்பபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ராஜி. இவரது மனைவி மகேஸ்வரி (32). சீவலப்பேரி அருகே உள்ள பொட்டல் நகரில் வசித்து வந்த ராஜியின் உறவினா் இறந்த நிலையில், தூக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை காலையில் உறவினா் ஒருவருடன் மகேஸ்வரி பைக்கில் சென்றாா். சீவலப்பேரி அருகேயுள்ள கான்சாபுரம் பகுதியில் சென்றபோது பைக் எதிா்பாராதவிதமாக சாலையோர கல்லில் மோதி கவிழ்ந்தது. இதில் மகேஸ்வரி தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தாா். அந்த வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் மகேஸ்வரி உயிரிழந்தாா்.

இது குறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.