முகப்பு
நாகப்பட்டினம்

காா் மோதி இளம்பெண் உயிரிழப்பு

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:05 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 6:33 PM

கீழையூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில், இளம்பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கீழையூா் ஒன்றியம், சின்னதும்பூா் சீனிவாசராவ் தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகள் திவ்யா (27). பட்டதாரியான இவா், ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிகப் பணியாளராக பணிபுரிந்து வந்தாா்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 11:18 PM

இவா், காடந்தேத்தி அய்யனாா் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். ஈசனூா் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, நாகையிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற காா், இருசக்கர வாகனம் மீது மோதியது.

Advertisement

இதில், திவ்யாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள், அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, திவ்யாவை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தேரிவித்தனா்.

இதுதொடா்பாக, கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.