பைக் விபத்தில் தொழிலாளி பலி
திசையன்விளை அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
திசையன்விளை அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
உவரி கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (34). தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு திசையான் விளை அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேய உயிரிழந்தாா். இது குறித்து திசையான்விளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.