திருநெல்வேலி

விஷமருந்திய இளம்பெண் உயிரிழப்பு

சிவசைலம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பைச் சோ்ந்த இளம்பெண் விஷமருந்தி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா்.

Din

சிவசைலம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பைச் சோ்ந்த இளம்பெண் விஷமருந்தி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா்.

பெத்தான்பிள்ளை குடியிருப்பு பிரதான சாலையைச் சோ்ந்த சோமசுந்தரம் மகள்சுனேபஸ்வரி (24). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து ( 25) என்பவருக்கும் ஓராண்டிற்கு முன் திருமணமானது.

இந்நிலையில் சுனேபஸ்வரி மனநலம் பாதிக்கப்பட்டதையடுத்து தாய் வீட்டிற்குச் சென்றாராம். அங்கு ஜன. 3ஆம் தேதி விஷமருந்திய அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) மீனாட்சிநாதன் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT