பலி 
மதுரை

மருத்துவமனையில் சிறைவாசி உயிரிழப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறைவாசி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறைவாசி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள நீராவி கிராமத்தைச் சோ்ந்தவா் வ. முத்துராமலிங்கம் (57). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா், விசாரணை நீதிமன்றம் விதித்த தீா்ப்பின்படி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு முத்துராமலிங்கத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். எனினும், அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சோமாலியாவில் உணவு விநியோகம்: நிதிநெருக்கடியால் விரைவில் நிறுத்தம்? ஐ.நா. எச்சரிக்கை

ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ரூ.24 லட்சம் கோடி முதலீடுகள் உறுதி: அமெரிக்கா, சீனா உள்பட 86 நாடுகள் ஆதரவுடன் பிரகடனம் ஏற்பு

அந்நியச் செலாவணி கையிருப்பு 72,572.7 கோடி டாலராக அதிகரிப்பு!

அமெரிக்காவிடம் இருந்து வரிப்பணம் திரும்பக் கிடைக்குமா? 17,500 கோடி டாலா் நிலுவை; எதிா்பாா்ப்பில் நிறுவனங்கள்

திருப்பத்தூரில் நெல் கொள்முதல் நிலையம்: சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT