முகப்பு
திருநெல்வேலி

எம்.சாண்ட் கேட்டு மிரட்டல்: எஸ்.ஐ., காவலா் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அருகே வீடு கட்ட இலவசமாக எம்.சாண்ட் கேட்டு மிரட்டியதாக எஸ்.ஐ. உள்பட 2 காவலா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:50 PM
பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்
பகிர்:

திருநெல்வேலி அருகே வீடு கட்ட இலவசமாக எம்.சாண்ட் கேட்டு மிரட்டியதாக எஸ்.ஐ. உள்பட 2 காவலா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

தாழையூத்தை அடுத்த ராஜவல்லிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரராஜன்(52). இவா் பாலாமடை பகுதியில் கிரஷா் ஆலை மற்றும் குவாரி வைத்து தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி தாழையூத்து காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமநாதன், காவலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் இவரது ஆலைக்குச் சென்று, வீடு கட்ட இலவசமாக எம்.சாண்ட் வேண்டும் எனக் கேட்டு மிரட்டினராம்.

இதுகுறித்து அவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், விசாரணை நடைபெற்ற நிலையில், உதவி ஆய்வாளரும், காவலரும் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.