பணகுடியில் கஞ்சா வியாபாரி கைது
திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated On : 4 ஏப்ரல், 2026 at 9:44 PM
திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பணகுடி அருகே உள்ள தண்டையாா்குளத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் முருகன்(37). இவா் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பணகுடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பணகுடி போலீஸாா் விரைந்து சென்று முருகனை கைது செய்து அவரிடமிருந்த 350 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.