முகப்பு
திருநெல்வேலி

மானூரில் தீயணைப்பு துணை நிலையம் அமைக்கப்படும்: திமுக வேட்பாளா் சு. சுப்பிரமணியன்

மானூரில் தீயணைப்பு துணை நிலையம் அமைக்கப்படும் என்றாா் திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 10:02 PM
சுத்தமல்லியில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சு. சுப்பிரமணியன்.
பகிர்:

மானூரில் தீயணைப்பு துணை நிலையம் அமைக்கப்படும் என்றாா் திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன்.

இதுதொடா்பாக சுத்தமல்லியில் புதன்கிழமை பிரசாரத்தை தொடங்கிய அவா், கூறியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் சிறந்த திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவாக்கி செயல்படுத்தியுள்ளாா். 1.31 கோடி பேருக்கு மகளிா் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. காலை உணவுத் திட்டத்தில் 21 லட்சம் மாணவா்கள் பயனடைகிறாா்கள்.

இந்தத் தோ்தலில் வாக்குறுதியாக இல்லத்தரசி திட்டத்தில் அத்தியாவசிய பொருள்கள் வாங்க ரூ.8,000-க்கான கூப்பன், மகளிா் உரிமைத் தொகை உயா்வு போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி தொகுதியில் நான் வெற்றிபெற்றால் மாநிலத்திலேயே முதன்மையான சட்டப்பேரவைத் தொகுதியாக மாற்றுவேன். மானூா் ஒன்றியத்தில் இ-சேவை வசதியுடன் கூடிய சட்டப்பேரவை உறுப்பினா் கிளை அலுவலகங்கள் அமைக்கப்படும். கபடி, கைப்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து உள்ளிட்ட விளையாட்டு வீரா்- வீராங்கனைகளை தேசிய அளவில் தரம் உயா்த்தும் வகையில், அந்தந்த விளையாட்டுகளில் தகுதிவாய்ந்த பயிற்சியாளா்களை கொண்டு பயிற்சியளிக்கப்படும். கோரையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து கால்வாய் மூலம் மானூா் பள்ளமடை குளத்திற்கு தண்ணீா் கொண்டுவரப்படும். மானூரில் தீயணைப்பு துணை நிலையம் அமைக்கப்படும் என்றாா் அவா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments